செவ்வாய், ஜூலை 21, 2009

இந்துக்களின் பாலிய விவாகம் பற்றி தமிழ் ஓவியா

தமிழ் ஓவியாவுக்கு தெரிந்திருந்தாலும் இன்னொரு முறை சொல்லுவது நல்லதுதான்.

தமிழ்நாட்டில் எந்த இந்துவும் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்ன சொல்கிறார் என்று கேட்டு நட்ப்பதில்லை. ஏன், காஞ்சி சங்கராச்சாரியார் என்ன சொல்கிறார் என்று கேட்டு நடப்பதில்லை. அவர்களை ஒரு சாதியில் இருக்கும் ஒரு சில சிகாமணிகள் கேட்கிறார்களே தவிர அவர்களும் இவர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்பதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் சொல்லுவதை செய்யவில்லை என்றால் சிறையில் போடவேண்டும் என்று சொல்லும் எந்த மன்னனும் இல்லை, இந்துக்களும் கையில் தீவட்டி எடுத்துக்கொண்டு காஞ்சி சங்கராச்சாரி சொல்வதை கேட்காதவனை அடி என்று கிளம்பவில்லை, கிளம்பப்போவதும் இல்லை. ஆகவே வீணாக ரத்தம் கொதிப்பது தேவையில்லை. சரியா? ராமானுஜ் தாத்தாச்சாரியார் சொல்லுவதோ அல்லது காஞ்சி சங்க்ராச்சாரி சொல்லுவதோ ஒருவேளை திராவிட கழகக்குஞ்சுகளுக்கு இனிப்பாக இருக்கலாம். அதனை வைத்து கிறிஸ்துவ இஸ்லாமிய மதமாற்றிகளுக்கு எழுதிக்கொடுக்க பிரயோசனப்படலாம். மற்றபடி எந்த பிரயோசனமும் இல்லை.

இந்துக்களிடம் இப்போது இல்லாத பாலிய விவாகம் பற்றி பேசுவது செத்த பாம்பை அடிப்பது போன்றது. அதில் என்ன வீரம் இருக்கிறது? உயிருடன் இருக்கும் இஸ்லாமிய பாலிய விவாக பாம்பை அடியுங்கள். உங்களது வீரத்தை மெச்சுகிறேன்.

ஆனால் இஸ்லாமியர்கள் இதே பாலிய விவாகத்தில் இப்போதும் என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள், அதனை எப்படி தாங்குகிறார்கள் என்பதைபார்க்க லிங்க் கொடுத்தேன். வாய் மூடி மவுனியாக இருக்கிறீர்கள்.

//அனைத்து மதங்களும் ஒழிய வேண்டும் என்பதுதான் பெரியார் தொண்டர்களின் நிலை.
//

அப்ப இஸ்லாம் ஒழிய வேண்டும் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா?

//இங்கே இஸ்லாமை பற்றி சொல்லியிருப்பதற்கு தமிழினத்தலைவர், பகுத்தறிவு செம்மல் வீரமணியின் கருத்தென்ன?
//

இதனை அவரிடம் சற்று கேட்டுச் சொல்கிறீர்களா?

என்ன சொல்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

நபிகள் நாயகம் 6 வயதில் ஆயீஷாவை திருமணம் செய்ததினால், அது எல்லா முஸ்லீம்களுக்கும் ஒரு அழகான எடுத்துக்காட்டு என்று சொல்லுகிறார்கள். அதனால் முஸ்லீம்கள் ஒருவயது சிறுமியை கூட திருமணம் செய்யலாம் என்று பகிரங்கமாக சொல்லுகிறார்கள். இப்போதும்.

குழந்தைகள் திருமணம் காரணமாக முஸ்லீம்கள் தங்கள் திருமணத்தை அரசாங்க பதிவேடுகளில் பதிய முடியாது என்று தமிழ்நாட்டில் இப்போது போர்கொடி தூக்கியிருக்கிறார்கள்

இதில் திராவிட கழகத்தின் நிலைப்பாடு என்ன? இதற்காக போராட்டம் ஆரம்பிக்கப்போகிறீர்களா?

கருத்துகள் இல்லை: